கோவை ஆட்சியர் தலைமையில் பசுமைக்குழு கூட்டம் - காலியிடங்களில் மரக்கன்றுகள் நட முடிவு

பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் மாவட்ட பசுமைக்குழு கூட்டத்தில் மரக்கன்றுகளை நடும் பணியை தீவிரப்படுத்த கோவை ஆட்சியர் ஆணையிட்டார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா சிறுதுளி, கீரின் கேர் அமைப்பு உள்ளிட்ட தன்னார்வலர்கள் அமைப்புகள் மற்றும் வனசரக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர்,



"இத்திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கு கோவை மாவட்டத்தில், வனத்துறை சார்பில் 10,42,538 மரக்கன்றுகளும், மாநகராட்சி சார்பில் 50,000 மரக்கன்றுகளும், மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் 75,462 மரக்கன்றுகளும், தன்னார்வ அமைப்பு மூலம் 30,000 மரக்கன்றுகளும், தனியார் நாற்றாங்கால்கள் மூலம் 60,000 மரக்கன்றுகளும், என மொத்தம் 12,58,000 மரக்கன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் தேக்கு, மகாகனி, மலைவேம்பு, சவுக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, வேம்பு, ஈட்டி, புங்கன், சரக்கொன்றை, புளி, கொடுக்காபுளி, கொய்யா, நெல்லி பாதாம் மற்றும் நாவல் போன்ற மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

தற்போது வரை வனத்துறை சார்பில் 5,70,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. பிறத்துறைகளின் சார்பில் மரக்கன்றுகள் நடவுசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

மேலும், மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய வளாகங்களிலும், கோயில் நிலங்கள், உள்ளிட்ட இடங்களையும், பிறதுறைகளுக்கு சொந்தமான காலி இடங்களை கண்டறிந்து, அங்கு மரகன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மாவட்டத்தின் வனப்பரப்பை அதிகரிக்கச் செய்து, பசுமையை ஏற்படுத்தும் நோக்குடன் மாவட்டத்திற்கான இலக்கை விரைவாக எய்திட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல் மற்றும் அதற்காக எடுக்கப்பட்டு வரும் பசுமை நடவடிக்கைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்தான விளக்கக்காட்சி திரையிடப்பட்டன.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...