பூஜ்ஜிய உமிழ்வு நாளை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

பூஜ்ஜிய உமிழ்வு நாளை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்பன் உமிழ்வை குறைப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


கோவை: சிஎஸ்ஐ மற்றும் ரங்கம்மாள் பள்ளியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டும், சுற்றுசூழலை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும், போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.

புதைபடிவ எரி பொருள்களில் இருந்து உலகிற்கு ஓய்வு அளிக்கும் வகையிலும் கார்பன் வெளியேற்றத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வருடம் தோறும் செப்டம்பர் 21-ஆம் தேதி சர்வதேச பூஜ்ஜிய உமிழ்வு தினம்(Zero Emission Day) கடைப்பிடிக்கப்படுகிறது.



இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கார்பன் உள்ளிட்ட புதைப்படிவ எரிபொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்பன் உமிழ்வை குறைப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பதை அடிப்படையாகக் கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



இதில் சிஎஸ்ஐ மற்றும் ரங்கம்மாள் பள்ளியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு, கார்பன் உமிழ்வை குறைக்க வேண்டும், சுற்றுசூழலை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும், போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.



இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தை வலியுறுத்தும் வகையில் மஞ்சப்பைகளையும் ஏந்தியவாறு பேரணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணி தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



முன்னதாக கார்பன் உமிழ்வை குறைப்பது தொடர்பான உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...