துடியலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - விதி மீறியதாக பாஜக வினர் மீது வழக்கு பதிவு

துடியலூரில் நடைபெற்ற ஊர்வலத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், அனுமதி இன்றி ஒலி பெருக்கி கட்டி இடையூறு கொடுத்ததுடன், காவல் துறையினரை பணிசெய்ய விடாமல் இடையூறு செய்ததாக உதவி ஆய்வாளர் அருள்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவை சேர்ந்த சஜூ, கிருஷ்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: உதவி ஆய்வாளர் குமார் அளித்த புகாரின் பேரில் பாஜகவைச் சேர்ந்த நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் நந்தா, பாஜக கோவை மாவட்ட மகளிர் அணி தலைவர் வத்சலா மற்றும் இளங்கோ உள்ளிட்டோர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கோவையிலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இதனையடுத்து நேற்று கோவையில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 16 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதனை முன்னிட்டு விநாயகர் சிலைகளை அப்பகுதி மக்கள், மற்றும் இந்து அமைப்பினர் ஊர்வலமாக கொண்டு வந்து நீர்நிலைகளில் கரைத்தனர்.

அதே சமயம் ஊர்வலத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி உரிய அனுமதி பெற்றே ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை துடியலூர் பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது பாஜகவினர் பட்டாசு வெடித்தும், அனுமதி இன்றி ஒலி பெருக்கி கட்டி இடையூறு கொடுத்ததுடன், காவல் துறையினரை பணிசெய்ய விடாமல் இடையூறு செய்ததாக உதவி ஆய்வாளர் அருள்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவை சேர்ந்த சஜூ, கிருஷ்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் உதவி ஆய்வாளர் குமார் அளித்த புகாரின் பேரில் பாஜகவைச் சேர்ந்த நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் நந்தா, பாஜக கோவை மாவட்ட மகளிர் அணி தலைவர் வத்சலா மற்றும் இளங்கோ உள்ளிட்டோர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...