உலக அல்சைமா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாக்கத்தான் - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

உலக அல்சைமா நோய் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் இன்று நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியில் செவிலியர் மாணவ, மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் வாக்கத்தானில் பங்கேற்றனர்.


கோவை: உலக அல்சைமா நோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



உலக அல்சைமா நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் இன்று நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியில் செவிலியர் மாணவ,மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் வாக்கத்தானில் பங்கேற்றனர்.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



வாக்கத்தான் நிகழ்ச்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



அல்சைமா நோய் குறித்து செவிலியர் மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் கையில் பதாகைகள் ஏந்தி ரேஸ் கோர்ஸ் சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணம் மேற்கொண்டனர்.

அல்சைமா நோய் நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் நோயாகும்.நாட்கள் செல்ல செல்ல மறதி அதிகரித்து பாதிப்பு உண்டாக்கும். தற்போது இருக்கக்கூடிய இளைஞர்கள், முதியோர்கள் இந்த அல்சைமா நோய் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருகின்றனர். விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இதனை ஆரம்ப காலகட்டத்தில் சரி செய்வதற்காக இன்று உலக அல்சைமா தினத்தையொட்டி இந்த வாக்கத்தான் நிகழ்வானது நடைபெற்றது.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...