திருப்பூரில் கணவன் சந்தேகப்பட்டு சண்டை - மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை

திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையத்தில் கணவர் சந்தேகப்பட்டு சண்டையிட்டு வந்ததால் மனமுடைந்த மனைவி, தனது வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்து உறவினர்களுக்கும் தோழிகளுக்கும் அனுப்பிவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: மனைவி உயிரிழப்புக்கு காரணமான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரை அடுத்த செட்டிபாளையம், பிரியங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் பனியன் தொழிலாளி. இவரது மனைவி சொர்ணகலா கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் ஆன நிலையில் இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கணவரின் சந்தேகத்தால் இருவருக்கும் இடையே தொடர்ந்து சண்டை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.



இந்நிலையில் இருவருக்கும் தகராறு ஏர்படதாக தெரிகிறது. இதை அடுத்து அக்கம் பக்கத்தினரின் சமரசத்தை தொடர்ந்து சுரேஷ் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், மனமுடைந்த சொர்ணகலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது சாவிற்கு கணவர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என தனது செல்போனில் வீடியோ பதிவிட்தோடு, தனது மகளை தனது பெற்றோரும் தனது இரு தங்கைகளும் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி அந்த வீடியோவை தனது தோழிகளுக்கும்., குடும்பத்தாருக்கும்., அனுப்பிவிட்டு விஷ மருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற 15 வேலம்பாளையம் போலீசார் சொர்ணகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே போலீசார் சொர்ணகலாவின் வீடியோ ஆதாரங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து அவரின் கணவர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...