தாராபுரத்தில் இன்று மட்டும் 69 விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாராபுரத்தில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 69 விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.



திருப்பூர்: இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இடம்பெற்ற பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி பொதுமக்களை வெகுவாக கவரும் வகையில் அமைந்தது.

இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம், பொன்னாபுரம், அலங்கியம், கோவிந்தாபுரம் சத்திரம் தென்தாரை அனுமந்தாபுரம் உள்ளிட்ட இடங்களில் ½ அடி முதல் 7 அடி வரையிலான 69 விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட்டது.



விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமை தாங்கி கொடிய அசைத்து துவக்கி வைத்தார்.

பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் செய்யப்பட்டன. விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை,அவல், பொறி, பழங்கள் படையலாக வைக்கப்பட்டன.



இந்த நிலையில் இன்று மதியம் வாகனங்கள் மற்றும் டிராக்டர்களில் விநாயகர் சிலைகள் பொள்ளாச்சி ரவுண்டானாவுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டது.



ஊர்வலத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக பூக்கடை கார்னர், ஜவுளிக்கடை வீதி சோழ கடைவீதி ஐந்து சாலை சந்திப்பு வழியாக தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில் அருகே அமராவதி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது.



பின்னர் அங்கு அமராவதி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.



ஊர்வலத்தின் போது அசம்பாவிதம் நடக்காமல் இருக்க கோவை மேற்கு மண்டல புதிய ஐ.ஜி.பவானீஸ்வரி தலைமையில் திருப்பூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் தாராபுரம் துணை கண்காணிப்பாளர் கலையரசன் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருப்புசாமி, விஜயபாஸ்கர் உள்பட 300- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.



நிகழ்ச்சியின் முன்னதாக பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...