உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - தண்ணீர் திருட்டை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பாலாறு படுகை நான்காம் மண்டல பாசன பகுதிக்கு உட்பட்ட 94068 ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்களை காப்பாற்றவும் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் இன்று முதல் 11.10.23 முடிய 21 நாட்களுக்கு பிரதான கால்வாயில் 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கபட்டது.



திருப்பூர்: 21 நாட்களுக்கு 2000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கபடும் என்றும் நீர்இருப்பு, நீர்வரத்தை பொருத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடபடும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பாலாறு படுகை நான்காம் மண்டல பாசன பகுதிக்கு உட்பட்ட 94068 ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்களை காப்பாற்றவும் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் இன்று முதல் 11.10.23 முடிய 21 நாட்களுக்கு பிரதான கால்வாயில் 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கபட்டது.

21 நாட்களுக்கு 2000 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கபடும். மேலும், நீர்இருப்பு, நீர்வரத்தை பொருத்து தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடபடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கலந்து கொண்டனர்.



இதற்கிடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைப்பெற்ற விவசாயிகள் ஆலோசணை கூட்டத்தில், தென்மேற்கு-வடகிழக்கு பருவமழை பெய்யாத காரணத்தால் வழக்கமாக பாசனத்திற்கு 4 நான்கு சுற்றுகள் வழங்கும் நிலையில், தற்போது ஒரு சுற்று தண்ணீர் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதனால், தண்ணீர் திருட்டை தடுக்க வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் குழு அமைக்கபட்டு, விவசாயிகள் கொடுக்கும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...