கோவை மாவட்ட திட்டக்குழுவின் இரண்டாவது கூட்டம் - மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பங்கேற்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழுவின் இரண்டாவது கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் முன்னிலையில், மாவட்ட திட்டக்குழு தலைவர் சாந்திமதி அசோகன் தலைமையில் நடைபெற்றது.


கோவை: வளர்ச்சித்திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும் என்பதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழுவின் இரண்டாவது கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் முன்னிலையில், மாவட்ட திட்டக்குழு தலைவர் சாந்திமதி அசோகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் மாவட்ட ஊராட்சி செயலர் பாஸ்கர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் நகராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காகவும்,மாவட்டம் முழுவதற்கும் ஒட்டு மொத்தமாக வரைவு வளர்ச்சித் திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காகவும், மாவட்ட திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் பணியானது மாவட்டத்திற்கான வளர்ச்சி உத்திகள், திட்டங்கள் செயல் திட்டங்கள் உருவாக்குதல் ஆகிய பணிகளை மாவட்ட திட்டக்குழு மேற்கொள்ளும். இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட திட்டக்குழு தலைவர் சாந்திமதி அசோகன், தற்போது இரண்டாவது கூட்டம் நடைபெறுகின்றது. திட்டக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையினை ஏற்று இன்றையதினம் திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் கொடுத்த கோரிக்கைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் கலந்து ஆலோசித்து சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளது.

கோரிக்கைகளின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அதன் விவரத்தை மாவட்ட திட்டக்குழுவிற்கு தெரிவிக்கவேண்டும் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாவட்ட திட்டக்குழுவில் புதிய வளர்ச்சித் திட்டம் ஒன்றை தயார் செய்வதற்கு விவாதித்து, பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கும்போது தேவையான திட்டத்திற்கான கருத்துகள் பரிந்துரைகள் செய்யப்படும். இதன் மூலம் சிறந்த திட்டத்தை தயாரிக்க உதவியாக இருக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக, அடுத்த கூட்டத்தில் அக்கோரிக்கைகளின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவிக்கவேண்டும். இதனால் வளர்ச்சித்திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும். இதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...