தாராபுரத்தில் உள்ள சவர்மா கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் - அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்துள்ள நிலையில், தாராபுரத்தில் உள்ள சவர்மா கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: கெட்டுப்போன பழைய சவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை மூன்று நாள் அல்லது நான்கு நாள் கழித்து சில கடைகளில் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டு 13 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி ஒருவர் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்துள்ளார். மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 43 பேர் சவர்மா சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் சவர்மா கடைகள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதேபோல திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள அனைத்து சவர்மாக்கடைகளையும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லலிதாம்பிகை முறையாக ஆய்வு செய்து கெட்டுப்போன (இறைச்சிகளை) பழைய சாரமாக்களை விற்பனை செய்து வரும் சவர்மா கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கெட்டுப்போன பழைய சவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை மூன்று நாள் அல்லது நான்கு நாள் கழித்து சில கடைகளில் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தாராபுரம் பகுதியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...