தாராபுரத்தில் உள்ள சவர்மா கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் - அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்துள்ள நிலையில், தாராபுரத்தில் உள்ள சவர்மா கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: கெட்டுப்போன பழைய சவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை மூன்று நாள் அல்லது நான்கு நாள் கழித்து சில கடைகளில் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டு 13 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி ஒருவர் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்துள்ளார். மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 43 பேர் சவர்மா சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் சவர்மா கடைகள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதேபோல திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள அனைத்து சவர்மாக்கடைகளையும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லலிதாம்பிகை முறையாக ஆய்வு செய்து கெட்டுப்போன (இறைச்சிகளை) பழைய சாரமாக்களை விற்பனை செய்து வரும் சவர்மா கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கெட்டுப்போன பழைய சவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை மூன்று நாள் அல்லது நான்கு நாள் கழித்து சில கடைகளில் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தாராபுரம் பகுதியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...