கோவை எனும் அதிமுக கோட்டைக்குள் எந்த கொம்பனும் ஊடுருவி ஓட்டை கூட போடமுடியாது - வைகை செல்வன் உறுதி!

பொள்ளாச்சியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய அதிமுக இலக்கிய அணி செயலாளருமான வைகைசெல்வன், கோவை என்ற அதிமுகவின் கோட்டைக்குள் எந்த கொம்பனும் ஊடுருவி ஓட்டை கூட போடமுடியாது என்பதை நிரூபித்து காட்டியது கோவை மாவட்டம் என்று கூறினார்.



கோவை: கோவை என்ற அதிமுகவின் கோட்டைக்குள் எந்த கொம்பனும் ஊடுருவி ஓட்டை கூட போடமுடியாது என்பதை நிரூபித்து காட்டியது கோவை மாவட்டம் என அதிமுக இலக்கிய அணி செயலாளருமான வைகைசெல்வன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் அதிமுக இலக்கிய அணி செயலாளருமான வைகைசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் வைகைச்செல்வன் பேசியதாவது, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, அதிமுகவில் மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை. அந்த கட்சி அவ்வளவு தான் என பேசினார்கள். ஆனால், நாட்டின் 3வது பெரிய கட்சியாக திகழ வைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

கோவை மாவட்டமானது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை 6 முறை முதலமைச்சராக மாற்றி அவரது கொள்கை மற்றும் கோட்பாட்டை கோவை மாவட்டம் தூக்கிச் சுமந்து வருகிறது.

கோயம்புத்தூர் என்று சொன்னால் அதிமுகவின் கோட்டை, இந்த கோட்டைக்குள் எந்த கொம்பனும் ஊடுருவி ஓட்டை கூட போட முடியாது என்பதை நிரூபித்து காட்டுகிற கோவை மாவட்டம்.

சிறையில் உள்ள செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்தது ஏன்?. நாட்டில் எந்த மாநிலத்திலாவது ஒரு அமைச்சராவது சிறையில் இருக்கிறாரா. அவரை பதவியை விட்டு இறக்காதது ஏன்?. இதனை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...