உடுமலையில் புகழ்பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

உடுமலையில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: உடுமலையில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காலையில் ஹோம பூஜையும், பால், தயிர் உட்பட பத்துக்கு மேற்பட்ட பொருட்கள் மூலம் அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள் செய்யபட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



இந்த பூஜையில், உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் மேற்கொண்டனர்.



இதேபோல உடுமலை குட்டை திடல் பகுதியில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சந்தன காப்பு மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.



மேலும் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வினை தீர்க்கும் விநாயகர் திருக்கோவிலில் தங்கக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...