அபார ஆற்றலால் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பல்லடத்தை சேர்ந்த ஒன்றரை வயது சிறுவன்!

பல்லடத்தை அடுத்த குன்னாங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் - பிரதீபா தம்பதியின் ஒன்றரை வயது மகன் சாய் மகிழன் விலங்குகள், பறவைகள், தேசிய சின்னங்களின் பெயர்களை சொன்னால் அதனை கண்டுபிடிக்கும் ஆற்றல் மூலம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.



திருப்பூர்: பல்லடம் அருகே அபார ஆற்றலால் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஒன்றரை வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 0

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குன்னாங்கல் பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி பிரதீபா. இவர்களுக்கு சாய் மகிழன் மற்றும் விசாக மித்திரன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவரது மூத்த மகன் சாய் மகிழன் பிறந்த எட்டாவது மாதத்தில் இருந்து வன விலங்குகள், செல்லப் பிராணிகள், பறவைகள், வாகனங்கள், வடிவங்கள், நமது தேசிய சின்னங்கள் ஆகிய புகைப்படங்களை காட்டி அதன் பெயர்களையும் சொல்வதற்கு அவரது தாய் பயிற்சி அளித்துள்ளார்.



ஒன்றரை வயதில் சிறுவன் சாய் மகிழனின் அறிவாற்றலை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்ற முன்னெடுப்பில் எட்டு வன விலங்குகள், எட்டு செல்லப்பிராணிகள், எட்டு பறவைகள், எட்டு பழங்கள், எட்டு காய்கறிகள், எட்டு வாகனங்கள், 18 வடிவங்கள், 8 உடல் உறுப்புகள், 7 தேசிய சின்னங்கள் ஆகியவற்றின் புகைப்படங்களின் பெயரை சொன்னாலே அந்த புகைப்படங்களை கண்டறியும் சாய் மகிழனின் அறிவாற்றலை காணொளியாக பதிவு செய்து Indian book of world records என்ற உலக சாதனை நிகழ்விற்கு அனுப்பியுள்ளார்.



சிறுவன் சாய் மகிழனின் இந்த அறிவாற்றலை உலக சாதனையாக "இந்தியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்" அங்கீகரித்து அவருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கியுள்ளது.

தனது மகனுக்கு உள்ள அறிவாற்றலை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற முன்னெடுப்போடு இந்த காணொளி பதிவை உலக சாதனை நிகழ்விற்கு அனுப்பியதாகவும், தற்போது ஒவ்வொரு புகைப்படத்தின் பெயர்களையும் தெளிவாக சொல்லும் அளவிற்கு சாய் மகிழன் பயிற்சி எடுத்து வருகிறார் எனவும் அவரது தாய் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

ஒன்றரை வயதில் உலக சாதனை புத்தகத்தில் சிறுவன் சாய் மகிழன் இடம்பெற்றது பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...