அதிமுகவை யாரும் அழிக்க முடியாது - உடுமலையில் வைகைச் செல்வன் சூளுரை

உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பில் பெதப்பம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தல் படி பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கட்டிடங்கள் நலத்திட்டங்களை தற்பொழுது திமுகவினர் தாங்காள் கொண்டு வந்ததை போல விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என வைகைச் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பில் பெதப்பம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தல் படி பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர்ராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியாதவது,



உடுமலை சட்டமன்ற தொகுதியில் சுமார் 400 கோடி அளவில் மக்களுக்கு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கட்டிடங்கள் நலத்திட்டங்களை தற்பொழுது திமுகவினர் தாங்காள் கொண்டு வந்ததை போல விளம்பரம் தேடிக் கொள்கின்றனர்.



வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று அவர் பேசினார். இதேபோல முன்னாள் அமைச்சர் இலக்கிய அணி செயலாளருமான வைகைச் செல்வன் சிறப்புரையாற்றினார்.



கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிமுக அம்மையார் மறைவிற்கு பின் அழிந்து போகும் என பேசி வந்தவர்கள் தற்பொழுது வாயடைத்து உள்ளனர். காரணம் இந்தியாவிலேயே கிளைச் செயலாளர் முதல்வர் ஆகும் ஒரே கட்சி அதிமுக தான்.



திமுக அரசு வாரிசு அரசியலை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது. மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இனிவரும் காலங்களில் திமுகவிற்கு தகுந்த பாடம் புகப்பட்டப்படும் என்றார்.

இந்தக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், பிரனேஷ், உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாகராஜ், நகர ஒன்றிய பேரூராட்சி மாவட்ட சார்பணி நிர்வாகிகள் உட்பட கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...