உடுமலையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு துணை பதிவாளர் மனைவி நினைவு நாள் - 400 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன் இன்று மறைந்த தனது மனைவி மீனம்மாளின் 9-ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 400க்கு மேற்பட்டோருக்கு 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



திருப்பூர்: மனைவியின் நினைவுநாளில் 400க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன் வழங்கினார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் கிருஷ்ணன் இன்று மறைந்த தனது மனைவி மீனம்மாள் அவர்களின் 9-ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் சுமார் 400க்கு மேற்பட்டோருக்கு 5 லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்களை பாலக்காடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜனாப் ஷாபி பரம்பிள் தலைமையில் வழங்கபட்டது.



உடுமலை நகர கூட்டுறவு பண்டக சாலை செயலாளர் துரைராஜ், ஊழியர் லதா, ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மீரான், கிருஷ்ணன், பழனிச்சாமி,ஆறுமுகம், ஷேக் அப்துல்காதர் ,தங்கராஜ், முனுசாமி, கவுருராஜ்,சாகுல் அமீது மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி முத்துக்குமார், காங்கிரஸ் சிறுபான்மை அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...