பல்லடத்தில் அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர அதிமுக சார்பில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் எம்ஜிஆர் சாலையில் நடைபெற்றது.



திருப்பூர்: 1984 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் சிலை மீண்டும் புரனமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இன்று முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர அதிமுக சார்பில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் எம்ஜிஆர் சாலையில் நடைபெற்றது.



1984 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் சிலை மீண்டும் புரனமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இன்று முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் பல்லடம் எம்எல்ஏ எம்.எஸ்.எம் ஆனந்தன், முன்னாள் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ பரமசிவம்,பொங்கலூர் ஒன்றிய செயலாளர் யு.எஸ்.பழனிச்சாமி, மற்றும் அதிமுக மகளிர் அணி, இளைஞரணி மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,



திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆட்சி அதிமுக ஆட்சியில் செய்த பணிகளை தான் திரும்ப செய்து கொண்டிருக்கிறார்கள். புதிதாக எந்த திட்டங்களும் திருப்பூர் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை. இந்த இரண்டரை வருட காலத்தில் திமுக எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, மீதமுள்ள இரண்டரை ஆண்டு காலத்திலும் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றப் போவதில்லை என்று தெரிவித்தார்.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...