ரத்தினபுரியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு - பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் பொதுமக்கள் புகார்

கோவை ரத்தினபுரி பகுதியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பாதுகாப்பு வழங்க கோரி சுமார் 100-க்கும் பொதுமக்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



கோவை: காவல்துறையினர் இரவு பகலாக ரோந்து பணி மேற்கொண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுகொண்டனர்.



கோவை ரத்தினபுரி பகுதியில் ஒரே வாரத்தில் 7 இடங்களில் திருட்டு சம்பவம் நடைபெற்றதால் பாதுகாப்பு வழங்க கோரி சுமார் 100-க்கும் பொதுமக்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



கடந்த 15 நாட்களில் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் ரத்தினபுரி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட GPM நகர், பூம்புகார் நகர், சேவா நகர் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் அரங்கேற்றி உள்ளது.

நேற்று பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதற்கு இரண்டு நாட்கள் முன்பு காலை 6 மணியளவில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறிக்க திருடர்கள் முயற்சித்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெரும்பளவில் அச்சம் அடைந்துள்ளனர்.

காவல்துறையினர் இரவு பகலாக ரோந்து பணி மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று பொதுமக்கள் கூறினர். இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறையினர் இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே கரும்புக்கடை பகுதியில் இரவு நேரங்களில் குறிப்பாக ஒரே சமயத்தில் இருசக்கர வாகனங்கள் திருடியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...