விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து தாராபுரத்தில் எல்.ஐ.சியை முற்றுகையிட்ட சிபிஐ கட்சியினர் கைது!!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து தாராபுரம் எல்.ஐ.சி அலுவலகத்தை முற்றுகையிட்ட 800 க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாராபுரம் எல்.ஐ.சி அலுவலகத்தை முற்றுகையிட்ட 800 பேர் கைது செய்யப்பட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எல். ஐ .சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் சி.பி.எம் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் தலைமையில் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அமராவதி ரவுண்டானாவரை பேரணியாக வந்துஎல்.ஐ.சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் திருப்பூர் புறநகர் மாவட்ட நிர்வாக குழு தலைவர் பி. ரகுபதி, புறநகர் மாவட்ட செயலாளர் கே.எம்.இஷாக், தாலுகா செயலாளர் லட்சுமணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



சி.பி.ஐ கொடிகளுடன் 800-க்கும் மேற்பட்ட ஆண்கள் - பெண்கள் பேரணியாக வந்து மத்திய அரசின் முரண்பாடான கொள்கைகளான விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிப்பு.



பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு பொருள்களின் விலை உயர்வு வேலையில்லா திண்டாட்டம் திருப்பூர் பனியன் உட்பட சிறு குறு தொழில்கள் முடக்கம் தொழிலாளர் விரோதம் விவசாயிகள் விரோத சட்டங்கள் நாட்டின் அரசுத்துறைகளில் ஊழல் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை சாதி, மத, மோதல்கள் சிறுபான்மை மற்றும் பழங்குடி மக்களை எதிராக செயல்படுவது.

நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மத்திய அரசு செய்து வருவதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்.



போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாகனத்தில் ஏற்றிச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...