கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் ஒப்படைப்பு செயல்முறை ஆணைத்தை விமான நிலைய அதிகாரிக்கு அனுப்பினார் ஆட்சியர்..!!

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்களை, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும் செயல்முறை ஆணையை, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ளார்.


கோவை: விமான ஓடுதள விரிவாக்கம், வாகனங்களுக்கான பாதை உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளலாம். ஆனால் தமிழக அரசுக்கும், விமான நிலைய ஆணையத்துக்கும் இடையில் இறுதி ஒப்பந்தம் போடப்படும் முன்பு, இந்த நிலத்தை குத்தகைக்கோ, உள் குத்தகைக்கோ விடக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலங்களை, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கும் செயல்முறை ஆணையை, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ளார். விமான நிலைய விரிவாக்க பணிகள் 14 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதற்கு தீர்வு காணும் வண்ணம் இந்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

விமான நிலைய விரிவாக்கத்துக்கு மொத்தம் 627.89 ஏக்கர் நிலம் கையகப்படுத்தித் தருமாறு, தமிழக அரசிடம் விமான நிலைய ஆணையம் கோரியிருந்தது. அதில் பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான 135 ஏக்கர் நிலமும் இருக்கிறது. கோவையில், விமான நிலைய விரிவாக்கத்துக்கு, கையகப்படுத்த திட்டமிடப்பட்ட 627 ஏக்கர் நிலங்கள், காளப்பட்டி, சிங்காநல்லுார், இருகூர், உப்பிலிப்பாளையம், நீலம்பூர் ஆகிய ஐந்து வருவாய் கிராமங்களில் அமைந்துள்ளது.

அதில், 403 ஏக்கர் பட்டா நிலம், 20.58 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஆகியவை, தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் இது தொடர்பான செயல்முறை ஆணையை வெளியிட்டுள்ளார். அதன்படி அதாவது, இந்த நிலம் தொடர்பான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன், விமான ஓடுதள விரிவாக்கம், வாகனங்களுக்கான பாதை உள்ளிட்ட பணிகளை ஆணையம் மேற்கொள்ளலாம். ஆனால் தமிழக அரசுக்கும், விமான நிலைய ஆணையத்துக்கும் இடையில் இறுதி ஒப்பந்தம் போடப்படும் முன்பு, இந்த நிலத்தை குத்தகைக்கோ, உள் குத்தகைக்கோ விடக்கூடாது.வேறு யாருடைய பெயருக்கும் மாற்றவும் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...