நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா -  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள வர சக்தி விநாயகர் கோவிலில் கடந்த பத்தாம் தேதி கும்பாபிஷேக விழா கோலாகலமாக தொடங்கியது. இன்றைய தினம் சூரிய கும்ப பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள், சுவாமிகளுக்கு கண் திறத்தல், பெயர் சூட்டுதல் நடைபெற்றது.



கோவை: நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அருள்மிகு வரசிக்தி விநாயகர் கோயிலில் முதலாம் ஆண்டு விழா வள்ளி தெய்வானை கல்யாணம், சுப்பிரமணிய சுவாமி பஞ்சலோக விக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண வைபோக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 10ம் தேதி மாலை மங்கல இசையுடன் தொடங்கிய விழாவில் விக்னேஸ்வர பூஜை, பஞ்சகாவிய பூஜை, வாஸ்து சாந்தி, ரக்‌ஷாபந்தனம், யாகசலா பிரவேசம், முதற்கால யாக பூஜைகள், மஹா பூர்ணாஹிதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் தொடங்கிய பூஜையில் சூரிய கும்ப பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள், சுவாமிகளுக்கு கண் திறத்தல், பெயர் சூட்டுதல் நடைபெற்றது.



தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் இருந்த மூலவர் வரசித்தி விநாயகருக்கு 108 பால் குடத்துடன் வாதியத்துடன் ஊர்வலமாக வந்து அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான மூலவர் வரசித்தி விநாயகர்க்கும் மற்றும் புதியதாக செய்யப்பட்டுள்ள உற்சவ திருமேனிகளுக்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேகத்தின் போது நரசிம்ம நாயக்கன் பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகர் தரிசனம் பெற்றனர். 



தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானமும் போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...