நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா -  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள வர சக்தி விநாயகர் கோவிலில் கடந்த பத்தாம் தேதி கும்பாபிஷேக விழா கோலாகலமாக தொடங்கியது. இன்றைய தினம் சூரிய கும்ப பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள், சுவாமிகளுக்கு கண் திறத்தல், பெயர் சூட்டுதல் நடைபெற்றது.



கோவை: நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அருள்மிகு வரசிக்தி விநாயகர் கோயிலில் முதலாம் ஆண்டு விழா வள்ளி தெய்வானை கல்யாணம், சுப்பிரமணிய சுவாமி பஞ்சலோக விக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண வைபோக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 10ம் தேதி மாலை மங்கல இசையுடன் தொடங்கிய விழாவில் விக்னேஸ்வர பூஜை, பஞ்சகாவிய பூஜை, வாஸ்து சாந்தி, ரக்‌ஷாபந்தனம், யாகசலா பிரவேசம், முதற்கால யாக பூஜைகள், மஹா பூர்ணாஹிதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் தொடங்கிய பூஜையில் சூரிய கும்ப பூஜைகள், இரண்டாம் கால யாக பூஜைகள், சுவாமிகளுக்கு கண் திறத்தல், பெயர் சூட்டுதல் நடைபெற்றது.



தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் இருந்த மூலவர் வரசித்தி விநாயகருக்கு 108 பால் குடத்துடன் வாதியத்துடன் ஊர்வலமாக வந்து அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான மூலவர் வரசித்தி விநாயகர்க்கும் மற்றும் புதியதாக செய்யப்பட்டுள்ள உற்சவ திருமேனிகளுக்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேகத்தின் போது நரசிம்ம நாயக்கன் பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு விநாயகர் தரிசனம் பெற்றனர். 



தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானமும் போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...