கோயம்புத்தூரில் ஜிப் லைன் மற்றும் ஜிப் சைக்கிள் சோதனை ஓட்டம்..!! மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு.!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பொழுதுபோக்கு மற்றும்‌ பாதுகாப்பு அம்சங்களுடன்‌ கூடிய குளத்தின்‌ மேற்பரப்பில்‌ சுமார்‌ 200 மீட்டர்‌ தொலைவிற்கு ஜிப்‌ லைன்‌ மற்றும்‌ ஜிப்‌ சைக்கிள்‌ (ZIP LINE and ZIP CYCLE) அமைக்கப்பட்டு, தற்போது சோதனை ஒட்டம்‌ நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆய்வு செய்தார்.


கோவை: வாலாங்குளத்தின்‌ பெயரைக்‌ குறிக்கும்‌ வகையில்‌ குளத்தின்‌ நுழைவுவாயில்‌ பகுதியில்‌ “V” வடிவில்‌ தோரணம்‌ அமைக்கும்‌ பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ ரூ.62.17 கோடி மதிப்பீட்டில்‌ சீர்மிகு நகரத்‌ திட்டப்பணிகளின்‌ ஒருபகுதியாக பொழுதுபோக்கு மற்றும்‌ பாதுகாப்பு அம்சங்களுடன்‌ கூடிய குளத்தின்‌ மேற்பரப்பில்‌ சுமார்‌ 200 மீட்டர்‌ தொலைவிற்கு ஒரே நேரத்தில்‌ 3 நபர்கள்‌ ஜிப்‌ லைனிலும்‌, 3 நபர்கள்‌ ஜிப்‌ சைக்கிளிலும்‌ பயணம்‌ செய்யும்‌ வகையில்‌ (ZIP LINE & ZIP CYCLE) அமைக்கப்பட்டு, தற்போது சோதனை ஓட்டம்‌ நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு, பணிகளை தரமானதாகவும்‌, பாதுகாப்பானதாகவும்‌ அமைய வேண்டுமென பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினார்‌.



முன்னதாக, உக்கடம்‌ வாலாங்குளத்தில்‌ சீர்மிகுநகர திட்டத்தின்கீழ்‌ ரூ.67.86 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைப்பு பணிகளின்‌ ஒருபகுதியாக வாலாங்குளத்தின்‌ பெயரைக்‌ குறிக்கும்‌ வகையில்‌ குளத்தின்‌ நுழைவுவாயில்‌ பகுதியில்‌ “V” வடிவில்‌ தோரணம்‌ அமைக்கும்‌ பணி மற்றும்‌ உணவு கூடம்‌ கட்டுமான பணிகளை நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்திட சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வுகளின் போது உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்கள்‌ கமலக்கண்ணன்‌, சரவணக்குமார்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...