கோயம்புத்தூரில் ஜிப் லைன் மற்றும் ஜிப் சைக்கிள் சோதனை ஓட்டம்..!! மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு.!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பொழுதுபோக்கு மற்றும்‌ பாதுகாப்பு அம்சங்களுடன்‌ கூடிய குளத்தின்‌ மேற்பரப்பில்‌ சுமார்‌ 200 மீட்டர்‌ தொலைவிற்கு ஜிப்‌ லைன்‌ மற்றும்‌ ஜிப்‌ சைக்கிள்‌ (ZIP LINE and ZIP CYCLE) அமைக்கப்பட்டு, தற்போது சோதனை ஒட்டம்‌ நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆய்வு செய்தார்.


கோவை: வாலாங்குளத்தின்‌ பெயரைக்‌ குறிக்கும்‌ வகையில்‌ குளத்தின்‌ நுழைவுவாயில்‌ பகுதியில்‌ “V” வடிவில்‌ தோரணம்‌ அமைக்கும்‌ பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ ரூ.62.17 கோடி மதிப்பீட்டில்‌ சீர்மிகு நகரத்‌ திட்டப்பணிகளின்‌ ஒருபகுதியாக பொழுதுபோக்கு மற்றும்‌ பாதுகாப்பு அம்சங்களுடன்‌ கூடிய குளத்தின்‌ மேற்பரப்பில்‌ சுமார்‌ 200 மீட்டர்‌ தொலைவிற்கு ஒரே நேரத்தில்‌ 3 நபர்கள்‌ ஜிப்‌ லைனிலும்‌, 3 நபர்கள்‌ ஜிப்‌ சைக்கிளிலும்‌ பயணம்‌ செய்யும்‌ வகையில்‌ (ZIP LINE & ZIP CYCLE) அமைக்கப்பட்டு, தற்போது சோதனை ஓட்டம்‌ நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு, பணிகளை தரமானதாகவும்‌, பாதுகாப்பானதாகவும்‌ அமைய வேண்டுமென பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினார்‌.



முன்னதாக, உக்கடம்‌ வாலாங்குளத்தில்‌ சீர்மிகுநகர திட்டத்தின்கீழ்‌ ரூ.67.86 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைப்பு பணிகளின்‌ ஒருபகுதியாக வாலாங்குளத்தின்‌ பெயரைக்‌ குறிக்கும்‌ வகையில்‌ குளத்தின்‌ நுழைவுவாயில்‌ பகுதியில்‌ “V” வடிவில்‌ தோரணம்‌ அமைக்கும்‌ பணி மற்றும்‌ உணவு கூடம்‌ கட்டுமான பணிகளை நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்திட சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வுகளின் போது உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்கள்‌ கமலக்கண்ணன்‌, சரவணக்குமார்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...