அரசுப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்..!! கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் மனு.!

கோவை க.க.சாவடி பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஆறு வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது வரை கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படவில்லை என அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் வந்து பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: வகுப்பறைகள் எப்போது வேண்டுமானலும் இடிந்து விழுந்தும் நிலையில் இருப்பதால்,மாணவர்களை பெரும்பாலும் வெளியில் அமர வைத்தே பாடம் நடத்தப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.



கோவை க.க.சாவடி பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஆறு வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது வரை கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படவில்லை எனவும் கழிவறை வசதிகள் கூட இல்லை எனவும் அவற்றை கட்டித் தர வலியுறுத்தி அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தமிழ் வழி கல்வி என இரண்டு வகுப்பு மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் அமர வைத்து வகுப்புகள் எடுக்கப்படுவதாகவும், மாணவர்கள் பள்ளியின் வெளியில் உள்ள பொதுக் கழிவறையையே உபயோகப்படுத்துவதாகவும் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கென தனி கழிப்பறை இல்லை எனவும் புகார் தெரிவித்தனர்.

அங்குள்ள வகுப்பறைகளும் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மாணவர்களை பெரும்பாலும் வெளியில் அமர வைத்தே பாடங்கள் நடத்தப்படுவதாக தெரிவித்த பெற்றோர்கள், மழைக்காலங்களில் மாணவர்கள் மிகவும் சிரமப்படுவதாக கூறினர்.

பள்ளி மாணவர்களுக்கென விளையாட்டு மைதானங்களும் இல்லை என தெரிவித்த அவர்கள் இது குறித்து பலமுறை அங்குள்ள அரசு நிர்வாகிகளிடம் புகார் மனு அளித்தும் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...