அரசுப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்..!! கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் மனு.!

கோவை க.க.சாவடி பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஆறு வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது வரை கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படவில்லை என அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் வந்து பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை: வகுப்பறைகள் எப்போது வேண்டுமானலும் இடிந்து விழுந்தும் நிலையில் இருப்பதால்,மாணவர்களை பெரும்பாலும் வெளியில் அமர வைத்தே பாடம் நடத்தப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.



கோவை க.க.சாவடி பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ஆறு வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது வரை கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படவில்லை எனவும் கழிவறை வசதிகள் கூட இல்லை எனவும் அவற்றை கட்டித் தர வலியுறுத்தி அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தமிழ் வழி கல்வி என இரண்டு வகுப்பு மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் அமர வைத்து வகுப்புகள் எடுக்கப்படுவதாகவும், மாணவர்கள் பள்ளியின் வெளியில் உள்ள பொதுக் கழிவறையையே உபயோகப்படுத்துவதாகவும் பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கென தனி கழிப்பறை இல்லை எனவும் புகார் தெரிவித்தனர்.

அங்குள்ள வகுப்பறைகளும் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மாணவர்களை பெரும்பாலும் வெளியில் அமர வைத்தே பாடங்கள் நடத்தப்படுவதாக தெரிவித்த பெற்றோர்கள், மழைக்காலங்களில் மாணவர்கள் மிகவும் சிரமப்படுவதாக கூறினர்.

பள்ளி மாணவர்களுக்கென விளையாட்டு மைதானங்களும் இல்லை என தெரிவித்த அவர்கள் இது குறித்து பலமுறை அங்குள்ள அரசு நிர்வாகிகளிடம் புகார் மனு அளித்தும் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆதங்கம் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...