மின் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு: பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தே அதிகரித்துள்ளதாக வணிகர் சங்க பேரவை தலைவர் பேட்டி

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் மின்சார கட்டணம் விவகாரத்தில் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும்,ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் வழி போக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநிலத் தலைவர் வெள்ளையன் புகார் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: மின் கட்டண உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனைக்கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் போராட்டங்கள் நடத்த தயாராக இருப்பதாக பேரவையின் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.



தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழாவானது திருப்பூர் புதூர் பிரிவு சாலையில் நடைபெற்றது. இதனை வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன் திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது,



நம் நாட்டில் உற்பத்தி செய்கின்ற சுய தொழிலை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் இதற்கு பாடுபடும்.

மின்சார கட்டணம் விலை உயர்த்தப்பட்டுள்ளது ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் வழி போக்கில் இது போன்ற செயல்களில் செயல்பட்டு வருகின்றனர். மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட விலை உயர்வை உயர்த்தியுள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் இதற்கான போராட்டங்கள் நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...