பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும்..!! தாராபுரத்தில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.!

தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, சாலை பராமரிப்பு ஊழியர் சங்கம் சார்பில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க கோரி முரசு கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். கூடுதலாக 10% ஆபத்துபடி உயர்வு வழங்க வேண்டும். காலியாக உள்ள 8000 சாலை பணியாளர்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கேட்டுகொண்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அப்போது கடந்து 2002-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பத்தாயிரம் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அவர்களை பணி நியமனம் செய்யப்பட்டது.



இதில் 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் பணி ஆபத்து பணி என்பதால் அவர்களுக்கு கூடுதலாக 10% ஆபத்துபடி உயர்வு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு கோட்டங்களில் காலியாக உள்ள 8000 சாலை பணியாளர்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி முரசு கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...