கோழி கழிவுகளை சாலையோரங்களில் கொட்டுவதால் நோய் பரவும் அபாயம் - மக்கள் அச்சம்!

மூலனூர் - சின்னக்காம்பட்டி சாலையோரங்களில் கோழி கழிவுகளை கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: மூலனூர் - சின்னக்காம்பட்டி சாலையோரங்களில் கோழி கழிவுகளை கொட்டுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி பகுதியில் முக்கிய தொழில்களில் ஒன்று கறிக்கோழி வளர்த்தல் ஆகும். மூலனூர் சின்னக்காம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

இந்நிலையில் பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும், பண்ணைகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி விடுவதாலும் மற்றும் கோழிகளுக்கு கொடுக்கும் தீவனங்களின் கலவைகள் அதிகமாகவோ, குறைவாகவோ கொடுத்து விடுவதாலும் கோழிகளுக்கு அதிக அளவில் வயிற்றுப்போக்கு உண்டாகிறது.

அதை விவசாயிகள் சரி வர கவனிக்காத காரணத்தினாலும் பண்ணையில் வளரும் கோழிகள் அதிக அளவில் இறந்து விடுகின்றன. குறிப்பாக மழைக்காலங்களில் இவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இவ்வாறு இறக்கின்ற கோழிகளை விவசாயிகள் சாக்கு மூட்டைகளில் கட்டி சாலையோரங்களில் போட்டு விடுகின்றனர். சில நேரங்களில் திறந்த வெளியில் கொட்டி விடுகின்றனர். இதனால் இரண்டு மூன்று நாட்களில் கோழிகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது.

அந்த பகுதியில் உள்ள நாய்கள், காக்கைகள் சாக்கு மூட்டைகளை கடித்து குதறுவதால் அழுகிய கோழிகள் ரோட்டில் சிதைந்து கிடக்கின்றன. இதனால் கொசுக்கள் ஈ தொல்லைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகின்றது.

மேலும் காக்கைகள் இந்த அழுகிய இறைச்சி துண்டுகளை தூக்கி கொண்டு போய் தோட்டங்களில் கால்நடைகளுக்கு வைத்திருக்கும் தண்ணீர் தொட்டிகளில் போட்டு விடுவதால் இந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது.

இறந்த கோழிகளை சாப்பிட்டு பழகிய நாய்கள் கோழிகள் கிடைக்கவில்லை என்றால் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை கடிக்க தொடங்கி விடுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகின்றனர்.

இதுபற்றி இப்பகுதி மக்கள் கூறியதாவது, நடவடிக்கை எடுக்க ேகரிக்கை கோழி பண்ணை விவசாயிகள் செத்த கோழிகளை சாக்கு மூட்டைகளில் கட்டி சாலையோரங்களில் போடுவதால் துர்நாற்றம் அதிகமாகி சுகாதார சீர்கேடால் கொசு உற்பத்தி அதிகமாகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.

இதனால் டெங்கு காய்ச்சல் நோய் பரவும் நிலை ஏற்படுகிறது. இது பற்றி பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை, தற்போது மூலனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...