கோவையில் நடைபெற்ற INTUC மாநில செயற்குழு கூட்டம் - பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் 251 வது மாநில செயற்குழு கூட்டத்தில், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் மாறிவரும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கோவை: கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற INTUC மாநில செயற்குழு கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் INTUC- இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் 251 வது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஐஎன்டியுசி கவுன்சிலை சேர்ந்த துளசிதாஸ், சண்முகம், மதியழகன், ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இதில் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. மாவட்ட மாநாடுகள் நடத்துவது, மின்வாரிய தொழிலாளர் ஊதிய ஒப்பந்தத்திற்கு பாராட்டு தெரிவிப்பது.

2. போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைகளான போக்குவரத்து தொழிலாளர்களை கழகங்களாக பிரிப்பதற்கு முன்பு இருந்தது போல் அரசு ஊழியர்கள் ஆக்குதல்.

3. பணியில் இருந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் இருந்து பண பயன் வழங்குதல்.

4. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் மாறிவரும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்குதல்.

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...