கோவையில் நடைபெற்ற INTUC மாநில செயற்குழு கூட்டம் - பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் 251 வது மாநில செயற்குழு கூட்டத்தில், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் மாறிவரும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கோவை: கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற INTUC மாநில செயற்குழு கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் INTUC- இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் 251 வது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஐஎன்டியுசி கவுன்சிலை சேர்ந்த துளசிதாஸ், சண்முகம், மதியழகன், ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இதில் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. மாவட்ட மாநாடுகள் நடத்துவது, மின்வாரிய தொழிலாளர் ஊதிய ஒப்பந்தத்திற்கு பாராட்டு தெரிவிப்பது.

2. போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைகளான போக்குவரத்து தொழிலாளர்களை கழகங்களாக பிரிப்பதற்கு முன்பு இருந்தது போல் அரசு ஊழியர்கள் ஆக்குதல்.

3. பணியில் இருந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் இருந்து பண பயன் வழங்குதல்.

4. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் மாறிவரும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்குதல்.

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல அலுவலர்கள் பயிற்சி நிகழ்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக 10 தொகுதிகளுக்கான 366 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்க...

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...