கிருஷ்ணரை வரவேற்க கண்ணன், ராதை வேடமிட்டு உற்சாக நடனமாடிய மூத்த குடிமக்கள்!

தாளியூரில் உள்ள மூத்த குடிமக்களின் குடியிருப்பான அனன்யா'ஸ் நானாநானி ஹோம்ஸில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கோகுலாஷ்டமி விழாவில், மூத்த குடிமக்கள், கண்ணன் மற்றும் ராதை வேடமிட்டு ஆடி பாடி கிருஷ்ணரை வரவேற்றனர்.



கோவை: தாளியூரில் உள்ள மூத்த குடிமக்கள் குடியிருப்பில் கோகுலாஷ்டமி விழாவில் மூத்த குடிமக்கள், கண்ணன் மற்றும் ராதை வேடமிட்டு ஆடி பாடி கிருஷ்ணரை வரவேற்றனர்.



கோவை மாவட்டம் தாளியூரில் உள்ள மூத்த குடிமக்களின் குடியிருப்பான அனன்யா'ஸ் நானாநானி ஹோம்ஸில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோகுலாஷ்டமி விழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது.



இதை முன்னிட்டு காலை கோ பூஜை, நவகலச திருமஞ்சனம், விஸ்வரூப தரிசனமும் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை தங்கத்தேர் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது.



இதில், மூத்த குடிமக்கள் ராதா கிருஷ்ணர் வேடமிட்டு ஆடியும் பாடியும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வரவேற்றனர்.



இங்குள்ள மூத்த குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்நிர்வாகத்தின் இயக்குநர் Dr.உமா மகேஸ்வரி யுவராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் இறுதியில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...