சனாதன சர்ச்சை - அமைச்சர் உதயநிதியை கண்டித்து கோவையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

சனாதனம் மற்றும் இந்து தர்மத்திற்கு எதிராக பேசிய தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, கோவை செஞ்சிலுவை முன்பாக இந்து முன்னணியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதியை கண்டித்து கோவையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் சனாதனத்திற்கு எதிராக சர்ச்சை கருத்துக்களை பேசி இருந்தார். இதற்கு திராவிட கட்சிகளின் தலைவர்கள் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்தும், கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



இந்நிலையில் சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி மற்றும் திராவிட இயக்கங்களை கண்டித்து கோவை செஞ்சிலுவை முன்பாக இந்து முன்னணியினர் 500க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார் பேசியதாவது,

தொடர்ந்து திமுக இந்து மதத்தைப் பற்றியும், சனாதனத்தை பற்றியும், இழிவாக பேசி வருகிறது. தேர்தல் சமயங்களில் மட்டும் இந்துக்களின் ஓட்டை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசி இருப்பது இந்துக்களின் மனதை புண்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...