தாராபுரத்தில் சாக்கடை கழிவால் துர்நாற்றம் - பொதுமக்கள் சாலை மறியல்!

தாராபுரத்தை அடுத்த உப்புத்துறைபாளையம் மற்றும் சூளைமேடு குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே நகராட்சி வாகனத்தில் சாக்கடை கழிவுகளை கொண்டு வந்து கொட்டிவிட்டு சென்றதாகவும், இதனால், துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே, குடியிருப்பு பகுதியில் சாக்கடை கழிவு கொட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரத்தை அடுத்துள்ள உப்புத்துறைபாளையம், சூளைமேடு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை, நகராட்சி வாகனத்தில் சாக்கடை கழிவுகளை கொண்டு வந்து இந்த பகுதியில் கொட்டி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.



இதனால், துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், வி.சி.க. முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்முத்து, நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில், நேற்று மதியம் 3:00 மணியளவில், தாராபுரம் - பழனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமதானம் செய்தனர்.

மேலும் அங்கு வந்த தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், மாலைக்குள், கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த மறியல் போராட்டத்தில், வி.சி.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் முத்தமிழ் வேந்தன், மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், நகர பொருளாளர் கரிகாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...