மத்திய அரசுக்கு எதிர்ப்பு..!! திருப்பூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்.!

விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மையை கண்டித்து திருப்பூரில் சாலைமறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.



திருப்பூர்: விலையை குறைக்க, வேலை கிடைக்க, ஊழல் நிறைந்த மோடி தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எதிராக நடைபெற்ற சாலை மறியலில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கமிட்டனர்.



நாட்டு மக்களின் கழுத்தை நெரிக்கும் விலைவாசி உயர்வு, வேலை இன்றி கலங்கி தவிக்கும் வேலையில்லாத இளைஞர்கள், ஆகியவற்றை எடுத்துரைக்கும் விதமாக, மத்திய அரசை கண்டித்து, வேலை கொடு, விலையை குறைத்திடு என்ற கோஷத்துடன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருப்பூர் மத்திய கலைஞர் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.



பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விலையை குறைக்க, வேலை கிடைக்க, ஊழல் நிறைந்த மோடி தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட 300க்கும் மேற்ப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.



மறியல் செய்த அனைவரையும் கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...