உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அறிவித்த விவகாரம்..!! கோவையில் சாமியாரின் படத்தை செருப்பால் அடித்த திமுகவினர்.!

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி அறிவித்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவ படத்தை கோவை துடியலூரில் திமுகவினர் செருப்பால் அடித்து எரித்தனர்.



கோவை: சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ படத்தினை திமுகவினர் தீயிட்டு கொழுத்தினர். சாமியாரின் படத்தினை கீழே போட்டு காலால் மிதித்தும் செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், உத்திர பிரதேச மாநிலம், அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவுபவர்களுக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார்.

இதோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அதனை அந்த சாமியார் தீயிட்டு கொளுத்தும் வீடியோ வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதற்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



இதற்காக கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே திமுக கோவை வடக்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் துடியலூர் பகுதி கழகம் சார்பில் திமுகவினர் சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாக்கு எதிர்ப்பு தெரிவித்து கோசங்களை எழுப்பினர்.



தொடர்ந்து அவரது உருவ படத்தினை தீயிட்டு கொழுத்தினர்.



அப்போது துடியலூர் போலீசார் உருவ படம் எரிப்பதை தடுக்க முயன்றனர்.



மேலும் திமுகவினர் சாமியாரின் படத்தினை கீழே போட்டு காலால் மிதித்தும் செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை காண்பித்தனர்.



இந்த போராட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சூரியன் தம்பி, பகுதி இளைஞரணி நிதியரசு, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராமசாமி, மாவட்ட பிரதிநிதி சன் சோமசுந்தரம், 2வது வட்ட கழக செயலாளர் சண்முகம், 2வது வட்டக்கழக துணை செயலாளர் தமிழ்நிதி, இளைஞர் அணி நிர்வாகிகள் இம்ரான்கான், சுபாஷ், சிவா, கார்த்தி, பகுதி கழக மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் ஆறுமுகம், ஜூனைதீன் பாய், ஆறுச்சாமி, வெற்றி செல்வன், ஜாபர் அலி, செல்வன், துரைராஜ், வாசு, பழனிசாமி, தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி ரவி உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...