பீக் ஹவர்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரதம் - சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்க முடிவு!

பீக் ஹவர்ஸ் கட்டணம் மற்றும் நிலை கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் செப் 7ஆம் தேதி நடைபெறவுள்ள தொழில் துறையினரின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என திருப்பூரில் நடைபெற்ற சிறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


திருப்பூர்: பீக் ஹவர்ஸ் கட்டணம் மற்றும் நிலை கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் சிறு சிறு நடுத்தர நிறுவனங்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த லட்சக்கணக்கான சிறு, குறு நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிதாக மின்வாரியத் துறை சார்பில் அமல்படுத்தப்பட்ட பீக் ஹவர்ஸ் மற்றும் நிலை கட்டணம் தொழில்துறையினரை மிகப்பெரும் அளவில் பாதிப்படைய செய்துள்ளது.

அதனை திரும்ப பெற வலியுறுத்தி ஒன்பது மாத காலமாக பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்தித்து வலியுறுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே தொழில்துறையை பாதுகாக்கக்கூடிய வகையில் பீக் ஹவர்ஸ் மற்றும் நிலை கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என மின்வாரியம் மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் வரும் 7 ஆம் தேதி காரணம்பேட்டை பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.



இது குறித்து திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து சிறு குறு தொழில் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.



அரசின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் பெரும் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



அரசு மின் கட்டண உயர்வினை திரும்பப்பெறும் வரையில் தங்களது போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...