இந்தியாவின்‌ சிறந்த இன்குபேட்டர்களின்‌ வரிசையில்‌ ஏஜசி ரைஸ் இடம்பிடிப்பு‌..!!

இந்தியாவின்‌ முதல்‌ ஐக்கிய நாடுகளின்‌ நிலையான வளர்ச்சிக்‌ கோட்பாடுகளை மையமாகக்‌ கொண்டு செயல்படும்‌ இன்குபேட்டரான ஏஜசி ரைஸ்‌, தேசிய இன்குபேட்டர்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்திற்க்கு கீழ்‌ இந்தியாவின்‌ சிறந்த 25 இன்குபேட்டர்க்கான தரவரிசைப்‌ பட்டியலில்‌ இடம்பெற்றுள்ளது.


இந்தியாவின்‌ சிறந்த 25 இன்குபேட்டர்களில்‌ ஒன்றாக ஏஜசி ரைஸ்‌ தேர்ந்தெடுக்கப்பட்டது ஏஜசி ரைஸின்‌ வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் எனஏஜசி ரைஸின்‌ தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்‌. மதன்‌ ஏ செந்தில்‌ தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின்‌ நிதி ஆயோக்‌, அடல்‌ இன்னோவேஷன்‌ மிஷன்‌ மற்றும்‌ ஐக்கிய நாடுகளின்‌ நிலையான வளர்ச்சிக்‌ கோட்பாடுகள்‌ கூட்டமைப்பு ஆகியவற்றினால்‌ ஆதரிக்கபடுகின்ற இந்தியாவின்‌ முதல்‌ ஐக்கிய நாடுகளின்‌ நிலையான வளர்ச்சிக்‌ கோட்பாடுகளை மையமாகக்‌ கொண்டு செயல்படும்‌ இன்குபேட்டரான ஏஜசி ரைஸ்‌, தேசிய இன்குபேட்டர்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்திற்க்கு கீழ்‌ இந்தியாவின்‌ சிறந்த 25 இன்குபேட்டர்க்கான தரவரிசைப்‌ பட்டியலில்‌ இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின்‌ சிறந்த இன்குபேட்டர்க்கான இத்தேர்வானது தொழில்‌ முனைவுத்‌ துறையில்‌, தொழில்‌ முனைவோர்களின்‌ தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும்‌ அவர்களின்‌ பொருளாதார மேம்பாட்டினை ஊக்குவிப்பு ஆகியவற்றிக்கான ஓர்‌ அங்ககாரமாகக்‌ கருதப்படுகிறது.

மேலும்‌, ஏஜசி ரைஸ்‌ புதுமையான தொழில்‌ முனைவோர்களுக்கு உந்து சக்தியாக உள்ளது மற்றும்‌ தொழில்‌ முனைவோர்‌ சுற்றுச்சூழலுக்கான ஆதரவை வழங்குகிறது. தொழில்முறை மற்றும்‌ தொழில்நுட்ப நிபுணர்களின்‌ வழிகாட்டுதல்‌ முதல்‌ தொழில்முனைவோர்களை முதலீட்டாளர்களுக்குப்‌ பரிந்துரைத்தல்‌ வரை, ஏஜசி ரைஸ்‌ தொழில்‌ முனைவோர்களுக்குத்‌ தேவையானத்‌ வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

இது குறித்து ஏஜசி ரைஸின்‌ தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்‌. மதன்‌ ஏ செந்தில்‌ அவர்களுடனான உரையாடலின்‌ போது “தேசிய இன்குபேட்டர்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கான இந்தியாவின்‌ சிறந்த 25 இன்குபேட்டர்களில்‌ ஒன்றாக ஏஜசி ரைஸ்‌ தேர்ந்தெடுக்கப்பட்டதிற்காக மகிழ்ச்சியடைகிறோம்‌. இத்தேர்வானது ஏஜசி ரைஸின்‌ வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்‌. இந்த அங்கீகாரமானதுத்‌ தொழில்முனைவோர்களை உருவாக்குதல்‌ மற்றும்‌ தொழில்‌ முனைவுத் துறைச்‌ சூழலின்‌ வளர்ச்சிக்கான எங்களின்‌ பங்களிப்பினை அடிக்கோடிட்டுக்‌ காட்டுகிறது.” என்று கூறினார்‌.

தொழில்‌ முனைவுத்‌ துறைச்‌ சார்ந்தத்‌ தங்கள்‌ சந்தேகங்களுக்கு 770801922, 7708034222 மற்றும்‌ ww.aicraise.com என்ற இணையதளம்‌ வாயிலாகத்‌ தொடர்புக்‌ கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...