கோவையில் சட்டவிரோதமாக குப்பை கொட்டிய கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.4 லட்சம் அபராதம்!

கோவை கிழக்கு மண்டலத்தில் ஹிந்துஸ்தான் கல்லூரியின் பின்புறம் உள்ள குடியிருப்பு கட்டுமான நிறுவன ஊழியர்கள் தங்கியுள்ள இடத்தின் குப்பையை சட்டவிரோதமாக தெருக்களில் கொட்டியதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் ரூ.4 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளது.


கோவை: கோவையில் சட்டவிரோதமாக தெருக்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள்‌, சாலைகள்‌, தெருக்களில்‌ குப்பைகளை கொட்டுவது தொடா்பாக மாநகராட்சி பணியாளா்களால்‌ தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்‌ கடந்த 30.08.2023 அன்று கிழக்கு மண்டலம்‌, வார்டு எண்‌.50க்கு உட்பட்ட ஹிந்துஸ்தான்‌ கல்லூரி பின் பகுதியில்‌ அடுக்குமாடி குடியிருப்பு கட்டும்‌ நிறுவனத்தில்‌ 200 மேற்பட்டோர்‌ தங்கியுள்ளனர்‌.

அவர்களிடமிருந்து உருவாகும்‌ குப்பைகளை மீனா எஸ்டேட்‌ மற்றும்‌ ஹிந்துஸ்தான்‌ அவென்யூ பகுதிகளில்‌ கொட்டியது கண்டறியப்பட்டு, மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ உத்தரவின் படி, சுகாதார ஆய்வாளர்‌ ஜீவமுருகராஜ்‌ சம்மந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.4 லட்சம்‌ அபராதமாக விதிக்கப்பட்டு, வங்கி வரைவோலையாக இன்று (04.09.2023) பெறப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள்‌, வணிக நிறுவனத்தினர்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள்‌, சாலைகள்‌, தெருக்களில்‌ குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து, அதற்கென தனியே வைக்கப்பட்டுள்ள குப்பைத்‌ தொட்டிகளில்‌ போடுமாறும்‌, இதனை மீறி செயல்படுவோர்‌ மீது மாநகராட்சி அதிகாரிகளால்‌ அபராதம்‌ விதிக்கப்படும்‌.

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...