கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் பங்கேற்றனர். பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுயசார்பு மற்றும் தலைமைப் பண்புகளை மேம்படுத்துவது குறித்து சிறப்புரைகள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் (Women Empowerment Cell) தொடக்க விழா செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) காலை நடைபெற்றது. கல்லூரியின் IAS அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் M.R. எழிலி தலைமை வகித்தார். தனது உரையில், நவீன காலத்தில் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். கல்லூரிகளில் இதுபோன்ற அமைப்புகள் செயல்படுவது மாணவிகளின் தலைமைப் பண்பு மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் என்றும் குறிப்பிட்டார்.



தொடர்ந்து, கணினி அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை இணைப் பேராசிரியர் முனைவர் S. சித்ரா, பெண்கள் மேம்பாட்டு அமைப்பின் புதிய பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கான பதவியேற்பு நிகழ்வை நடத்தி வைத்தார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக கோவையைச் சேர்ந்த Point Perfect Technology Solutions நிறுவனத்தின் HR மேலாளர் G.S. கிஷோர் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தனது உரையில், கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் முறைகள் மற்றும் வேலைவாய்ப்புத் திறன்களை வளர்த்துக்கொள்வதன் அவசியம் குறித்து அவர் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து முனைவர் ஏ. மாலதி மேம், பெண்கள் அதிகாரம் மற்றும் விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். பெண்கள் எதிர்கொள்ளும் சமூகச் சவால்கள், அவற்றை எதிர்கொள்ளும் மன உறுதி, பொருளாதார சுதந்திரத்தின் அவசியம் மற்றும் பாலின சமத்துவம் குறித்து அவர் பேசினார். மாணவிகள் சுயமரியாதையுடனும் இலட்சியக் கனவுகளுடனும் தங்களது எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் நிறைவில், முதலாம் ஆண்டு கணினி அறிவியல் முதுகலை மாணவி பவி வர்ஷினி R நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் தொடக்க விழா நிறைவடைந்தது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...