தாராபுரத்தில் தினமலர் நாளிதழை சுடுகாட்டில் அடக்கம் செய்து விசிகவினர் நூதன போராட்டம்!

ஈரோடு - சேலம் பதிப்பு, தினமலர் நாளிதழ் முதல் பக்கத்தில் காலை உணவு திட்டத்தை தரக்குறைவாக விமர்சித்து, வெளியான செய்தி கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தினமலர் நாளிதழை கண்டிக்கும் விதமாக தாராபுரத்தில் தினமலர் நாளிதழை சுடுகாட்டில் அடக்கம் செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே தினமலர் நாளிதழை சுடுகாட்டில் அடக்கம் செய்து கால்களால் மிதித்து விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு - சேலம் பதிப்பு, தினமலர் நாளிதழ் முதல் பக்கத்தில், 'காலை உணவு திட்டம்; மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு; ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது' எனும் தலைப்பில் செய்தி வெளியானது.



இது, வி.சி.க.,வினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அக்கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஓவியர் மின்னல் தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் தாராபுரம்-திருப்பூர் சாலை காமராஜபுரம் பகுதியில் ஈரோடு சேலம் தினமலர் பதிப்பிற்கு பாடை கட்டி அதில் தினமலர் பேப்பர் கட்டுகளை அடுக்கி வைத்து அதற்கு மாலை போட்டு நான்கு பேர் சுமந்தபடி வடதரை மற்றும் காமராஜபுரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக காமராஜபுரம் சுடுகாட்டிற்கு வந்தனர்.



சுடுகாட்டில் வெட்டி வைக்கப்பட்டிருந்த குழியில் தினமலர் பேப்பர்களை வைத்து அதனை அடக்கம் செய்து சமாதி இட்டனர்.



அதன் பிறகு சமாதிக்கு மாலையிட்டு அதனை காலால் மிதித்து தினமலர் நாளிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.



இதனிடையே தினமலர் நாளிதழை சுமந்து வந்த பாடையை எரித்து தினமலர் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்து தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு தினமலர் நாளிதழுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு விசிகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...