பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு தடை விதிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

காங்கேயம் அடுத்த சிவன்மலை பகுதியில் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடிய பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு தடை விதிக்க கோரி அப்பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர்: காங்கேயம் அடுத்த சிவன்மலை பகுதியில் அமைய உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலைக்கு தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் சிவன்மலை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலை துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை அமையும் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு, தோட்டங்கள், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் ஆகியவை உள்ளது.

எனவே இந்த தொழிற்சாலை அமையும் பட்சத்தில் அங்கிருந்து வரக்கூடிய புகையால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் ஏராளமான நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளது.



பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடிய பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...