சத்குரு பிறந்தநாள்‌ விழாவை கொண்டாடி மகிழ்ந்த ஆயிரக்கணக்கான மலைவாழ்‌ மக்கள்‌!

ஈஷா நிறுவனர் சத்குருவின்‌ பிறந்தநாளான செப்‌ 3ஆம்‌ தேதியை ஆயிரக்கணக்கான மலைவாழ்‌ மக்களும்‌, கிராம மக்களும்‌ ஒன்று கூடி கொண்டாடி மகிழ்ந்தனர்‌. ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில்‌ சத்குருவின்‌ திருவுருவ படத்தை வைத்து பூஜைகள்‌ செய்தும்‌, இனிப்புகள்‌ வழங்கியும்‌, அன்னதானமிட்டும்‌ பெரு விமர்சையாக கொண்டாடினர்‌.


கோவை: ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருவின் பிறந்தநாளை ஆயிரக்கணக்கான மலைவாழ்‌ மக்களும்‌, கிராம மக்களும்‌ ஒன்று கூடி கொண்டாடி மகிழ்ந்தனர்‌

ஈஷா யோக மையத்தை சுற்றியிருக்கும்‌ கிராம பகுதிகளான மத்வராயபுரம்‌, முட்டத்துவயல்‌ ஆகிய கிராம பகுதிகளில்‌ சத்குருவின்‌ திருவுருவ படத்தை வைத்து வழிபட்டு அன்னதானமிட்டு கொண்டாடினர்‌.

மேலும்‌ தேவராயபுரம்‌, விராலியூர்‌, நரசிபுரம்‌, இந்திராநகர்‌ (விராலியூர்‌), காந்தி காலனி (செம்மேடு) ஆகிய பகுதியில்‌ சத்குருவின்‌ படம்‌ வைத்து பூஜைகள்‌ செய்து இனிப்புகள்‌ வழங்கி தங்கள்‌ மகிழ்ச்சியையும்‌ பகிர்ந்து கொண்டனர்‌.



இதேப்போல் மலைவாழ்‌ மக்கள்‌ வசிக்கும்‌ பஞ்ச கிராமம்‌ என்று அழைக்கப்படும்‌ பட்டியார்‌ கோவில்‌ பதி, மடக்காடு, தாணிக்கண்டி, முள்ளங்காடு, குலத்தேரி, ஆகிய கிராமத்தில்‌ வசிக்கும்‌ மலைவாழ்‌ மக்கள்‌ சத்குருவின்‌ திருவுருவத்தை ரதத்தில்‌ வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து ஆதியோகியின்‌ சிலையின்‌ முன்பாக மாலை 6.30 மணியளவில்‌ அவர்களின்‌ ஊர்வலத்தை நிறைவு செய்தனர்‌.



இந்த கொண்டாட்டங்களில்‌ சிங்கப்பதி, சர்கார்‌ போரத்தி, நல்லார்பதி, சந்தேகவுண்டன்‌ பாளையம்‌ ஊர்களை சேர்ந்த மக்களும்‌ கலந்து கொண்டனர்‌. ஆயிரக்கணக்கான மக்கள்‌ கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில்‌, மலைவாழ்‌ மக்கள்‌ அவர்களுக்கே உரிய மேளங்கள்‌ முழங்க நடனமாடி கொண்டாட்டத்துடன்‌ இந்த விழாவை நடத்கினர்‌.

இந்த ஊர்வல நிறைவை தொடர்ந்து ஆலந்துறை, தொண்டாமுத்தூர்‌, அட்டுக்கள்‌, சந்தேகவுண்டன்‌ பாளையம்‌, பூலுவாம்பட்டி மக்கள்‌ ஒன்றிணைந்து இரவு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்‌. ஈஷா யோக மையத்தை சுற்றி இருந்த அனைத்து கிராம மற்றும்‌ மலை வாழ்‌ பகுதிகளும்‌ நாள்‌ முழுவதும்‌ நிகழ்ந்த ஏராளமான நிகழ்ச்சிகளால்‌ விழா கோலம்‌ பூண்டிருந்தது.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...