கோவை தடாகம் பகுதியில் உரிமம் இல்லாமல் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த நபர் கைது - போலீசார் தீவிர விசாரனை

கோவை தடாகம் காவல் எல்லைக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்திருந்த ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து தோட்டாக்கள் மற்றும் கரி மருந்துகளும் பறிமுதல்.



கோவை: நாட்டு துப்பாக்கி, பயன்படுத்தாத 1 தோட்டா மற்றும் பயன்படுத்திய 30 தோட்டாக்கள் மற்றும் தோட்டா செய்வதற்கான 350கி கரி மருந்து ஆகியவற்றை நபர் ஒருவர் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைப்பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை வனச்சரகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வனக் களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஞானசேகரன் என்பவருக்கு சொந்தமான எம்.எஸ்.கே சேம்பர் பகுதியில் ஒரு நாட்டு துப்பாக்கியும், பயன்படுத்தாத 1 தோட்டா மற்றும் பயன்படுத்திய 30 தோட்டாக்கள் மற்றும் தோட்டா செய்வதற்கான 350கி கரி மருந்து ஆகியவை வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் வைத்திருந்தது உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என தெரிய வந்தது.

இதனைடுத்து ஞானசேகரனை தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு துப்பாக்கிகளை கைப்பற்றி ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...