கோவை தடாகம் பகுதியில் உரிமம் இல்லாமல் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த நபர் கைது - போலீசார் தீவிர விசாரனை

கோவை தடாகம் காவல் எல்லைக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் உரிமம் இல்லாமல் துப்பாக்கியை வைத்திருந்த ஞானசேகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து தோட்டாக்கள் மற்றும் கரி மருந்துகளும் பறிமுதல்.



கோவை: நாட்டு துப்பாக்கி, பயன்படுத்தாத 1 தோட்டா மற்றும் பயன்படுத்திய 30 தோட்டாக்கள் மற்றும் தோட்டா செய்வதற்கான 350கி கரி மருந்து ஆகியவற்றை நபர் ஒருவர் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைப்பார்த்து வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை வனச்சரகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வனக் களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஞானசேகரன் என்பவருக்கு சொந்தமான எம்.எஸ்.கே சேம்பர் பகுதியில் ஒரு நாட்டு துப்பாக்கியும், பயன்படுத்தாத 1 தோட்டா மற்றும் பயன்படுத்திய 30 தோட்டாக்கள் மற்றும் தோட்டா செய்வதற்கான 350கி கரி மருந்து ஆகியவை வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் வைத்திருந்தது உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என தெரிய வந்தது.

இதனைடுத்து ஞானசேகரனை தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு துப்பாக்கிகளை கைப்பற்றி ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...