பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் சிறுவர் பூங்கா திறப்பு - காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பங்கேற்பு..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் திறந்து வைத்தார். தொடர்ந்து காவலர் குடியிருப்புகள் மற்றும் காவல் நிலையத்தையும் அவர் ஆய்வு செய்தார்.



கோவை : சிறுவர் பூங்காவினை திறந்து வைக்க வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனுக்கு காவலர் குடியிருப்பில் குடியிருக்கும் காவலரின் குழந்தைகள் பூங்கொந்து கொடுத்த வரவேற்றார்.



அதன்பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறுவர் பூங்காவின் கல்வெட்டினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.



கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் திறந்து வைத்தார்.



தொடர்ந்து காவலர் குடியிருப்புகள் மற்றும் காவல் நிலையத்தையும் அவர் ஆய்வு செய்தார்.



கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலன் கருதி, நடைபயிற்சி மேற்கொள்வதற்காக நடைபயிற்சி மையம் மற்றும் காவலர்களின் குழந்தைகள் மகிழ்விற்காகவும், பொழுதுபோக்குக்காகவும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய வளாகத்தில் சுமார் 50 சென்டில் சிறுவர் பூங்கா ஒன்று பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினரால் உருவாக்கப்பட்டது.

சிறுவர் பூங்காவினை திறந்து வைக்க வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனுக்கு காவலர் குடியிருப்பில் குடியிருக்கும் காவலரின் குழந்தைகள் பூங்கொந்து கொடுத்த வரவேற்றார். அதன்பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறுவர் பூங்காவின் கல்வெட்டினை திறந்துவைத்தார்.



தொடர்ந்து சிறுவர் பூங்காவினை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்து பூங்காவில் ஊஞ்சல் மற்றும் சி-சா விளையாடும் குழந்தைகளுடன் உரையாடினார்.



அங்கு அமைக்கபட்டுள்ள செட்டில்கார்க் மைனதானத்தில் பயிற்சி எடுத்துவரும் மாருதி உடற்கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.



தொடர்ந்து காவல் நிலைய வளாகத்திலுள்ள காவலர் குடியிருப்புகளை பார்வையிட்டு அங்கு குடியிருக்கும் காவலர் குடும்பத்தாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.



அதன்பிறகு காவலர் குடியிருப்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து காவல்நிலையத்திற்கு சென்ற அவர் அங்கு ஆவணங்களை ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், ஆய்வாளர் தாமோதரன், உதவி ஆய்வாளர்கள் சிலம்பரசன், கணேசமூர்த்தி, தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஐயப்பசாமி, தனிப்பிரிவு சிறப்பு காவலர் கங்காதரன் விஜயகுமார், பயிற்சி உதவி ஆவாளர் பாலகணேஷ், காவலர் அன்சர், மாருதி கல்லூரியின் ஆசிரியர் தங்கராஜ், காவலர் குடியிருப்பில் குடியிருக்கும் காவலர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் உட்பட பலர் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...