பல்லடத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்..! வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குடியேறும் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிட்பு செய்து கட்டப்பட்ட கட்டடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: டாஸ்மாக் கடையால் பல்வேறு இன்னலுக்கு ஆளாகுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பாய், தலையனையுடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ளது செட்டிபாளையம் சாலை. பல்லடம் முதல் கொச்சின் சாலையை இணைக்கும் நெடுஞ்சாலையாக உள்ளதால் இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இதனிடையே செட்டிபாளையம் சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆகிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் 1830 எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் குடியிருப்புக்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனை ஆகியவை அமைந்துள்ளன.

இந்நிலையில் டாஸ்மாக் கடையில் பார் வசதி கிடையாது. இதனால் இங்கு மது வாங்குபவர்கள் சாலையிலேயே மதுவை குடித்துவிட்டு அலங்கோலமாக படுத்துக்கிடப்பதும், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

இந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமையில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தின் ஒரு கட்டமாக டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பாய் தலையணையுடன் வந்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டாஸ்மாக் கடை மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒருகட்டத்தில் பொதுமக்கள் கேள்விகளால் துளைத்தெடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதில் சொல்லமுடியாமல் மேலாளர் திணறினார்.



பின்னர் பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளிக்க தனக்கு அதிகாரமில்லை என அடிக்கடி பதில் தெரிவித்ததால் பொதுமக்கள் கடுப்பாகி அதிகாரமில்லாத அதிகாரியிடம் பேச்சுவார்த்தை எதற்காக நடத்த வேண்டும் என கொந்தளித்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...