கோவையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகள்..! மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.!

கோவை மாவட்டம் கோட்டூர் பேரூராட்சி மலையாண்டிபட்டினம் மனோன்மணி செல்லமுத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு நிர்வாகத்துடன் இணைந்து ரோபோடிக்ஸ் பயிற்சி பாரதி அறக்கட்டளை ஆழியாறு அறக்கட்டளை வழங்கி வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாண் இயக்குனருமான ஜெயஸ்ரீ முரளிதரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நல்லட்டிபாளையம் ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெயஸ்ரீ முரளிதரன் நேரில் பார்வையிட்டார்.

கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாண் இயக்குனருமான ஜெயஸ்ரீ முரளிதரன் கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.



அதன்படி கோவை மாவட்டம் கோட்டூர் பேரூராட்சி மலையாண்டிபட்டினம் மனோன்மணி செல்லமுத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு நிர்வாகத்துடன் இணைந்து ரோபோடிக்ஸ் பயிற்சி பாரதி அறக்கட்டளை ஆழியாறு அறக்கட்டளை வழங்கி வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நல்லட்டி பாளையம் ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை பார்வையிட்டார்.



சமத்தூர் பேரூராட்சி ஐந்தாவது வார்டில் சாலை அமைக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.



பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வுகளில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் உட்பட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...