பள்ளிக்கூடம் 2.0வில் பள்ளி மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் தற்காப்புக்கலை பயிற்சி!

கோவை மாவட்ட காவல்துறை சார்பில், ‘பள்ளிக்கூடம் 2.0’ என்ற திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று ஆலாந்துறை காவல் நிலைய பகுதியில் மாணவிகளுக்கு 4 நாள் தற்காப்பு கலை பயிற்சிகள் தொடங்கி உள்ளது.


கோவை: கோவை மாவட்ட காவல்துறை சார்பில்ஆலாந்துறை காவல் நிலைய பகுதியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளது.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ என்ற திட்டத்தின் மூலம் சுமார் 1,300 பள்ளிகளில் சுமார் 2,11,000 மாணவ மாணவிகளுக்கு காவல்துறையினர் மூலம் பாலியல் குற்றங்கள் சம்மந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இது பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் ‘பள்ளிக்கூடம் 2.0’ என்ற மேம்படுத்தப்பட்ட திட்டத்தினை தொடங்கி இதன் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான விழிப்புணர்வு மற்றும் அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் யுக்திகளை அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் இன்று (30.08.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் ஆலாந்துறை காவல் நிலைய பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் GI TOKU KAI KARATE SCHOOL SHINKEN SPORTS KARATE ACADEMY-யை சேர்ந்த தற்காப்புக்கலை பயின்ற பெண் பயிற்சியாளர்கள் மற்றும் கோவை மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த தற்காப்புக்கலை பயிற்சி பெற்ற நான்கு பெண் காவலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், பள்ளி மாணவிகளுக்கு அவர்களிடம் யாரேனும் தவறாக நடந்து கொள்ள முற்பட்டால் அச்சம் கொள்ளாமல் அவர்களிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கான தற்காப்பு முறைகள் பயிற்றுவிக்கப்பட்டன.



இப்பயிற்சி வகுப்பில் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 11-ஆம் வகுப்புகள் படிக்கும் சுமார் 40 மாணவிகள் கலந்து கொண்டனர். இதுபோன்ற தற்காப்பு பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு பள்ளிகளிலும் நான்கு நாட்கள் நடைபெற உள்ளன.

மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகளிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மாணவிகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் அதனை யாரிடம் தெரிவிக்க வேண்டும், எவ்வாறு தெரிவிக்க வேண்டும், மற்றும் அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு புரியும் வகையில் எடுத்துக் கூறி அறிவுரை வழங்கினார்.

இப்புதுமையான நிகழ்ச்சி பள்ளி மாணவிகளிடையே பெரிதும் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளதாக மாணவிகளும், ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...