சமுதாயத்தை பிளவுபடுத்தும் சக்திகளை நாம் புறக்கணிக்க வேண்டும்..! - பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் பேட்டி

மத உணர்வுகளை தூண்டி சமுதாயத்தை பிளவுபடுத்தும் சக்திகளை நாம் புறக்கணிக்க வேண்டும் என கோவை துடியலூரில் நடைபெற்ற அனைத்து சமூதாய பிரார்த்தனைக் கூட்டத்தில் பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.



கோவை: அவரவர் மதத்தினுடைய கோட்பாடுகளை, கொள்கைகளை கோவில்களிலோ தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ பேசலாம் பொது இடங்களில் அவற்றைப் பேசும் போது தவறான புரிதலை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது என்று வேலூர் இப்ராஹிம் கூறினார்.

கோவை துடியலூர் உள்ள புதிய வாழ்வு நகர தேவாலயத்தில் அனைத்து சமுதாயத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பிரார்த்தனை நிகழ்வு நடந்தது.



இதில் தேவாலயத்தின் போதகர் இமானுவேல் ஜேக்கப், மலுமிச்சம்பட்டி நாகசக்தி தியான பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள், பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அதில் இந்தியா புதிய வல்லரசாக உருவெடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மத உணர்வுகளைத் தூண்டி பாரதத்தை பிரித்தாளும் பணிகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதை மக்கள் புரிந்து கொண்டு புறக்கணிக்க வேண்டும். எல்லா மதத்தினரும் தங்களுடைய புனிதமான வார்த்தைகளை போராட்டங்களுக்கு பயன்படுத்துவதால் அவர்களை எதிர்மறை கருத்து கொண்டவர்களாக பொதுமக்கள் நினைக்கும் சூழல் உருவாகிறது. ஆகவே அவரவர் மதத்தினுடைய கோட்பாடுகளை, கொள்கைகளை கோவில்களிலோ தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ பேசலாம் பொது இடங்களில் அவற்றைப் பேசும் போது தவறான புரிதலை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

இதனை அனைத்து மதத்தினரும் தவிர்க்க வேண்டும். சகோதரத்துவம், அன்பு, விட்டுக்கொடுத்தல், ஒருமைப்பாடு போன்றவற்றை தான் அனைத்து மதங்களும் நமக்கு கற்பிக்கின்றன. மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவரவர் மதங்களின் செயல்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து கோவை மாவட்டத்தில் மழை பெய்யவும், வறட்சி நீங்கவும் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.



இதில் விஸ்வகர்மா சங்க உறுப்பினர்கள் மற்றும் தேவாலயத்தை சார்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...