சமுதாயத்தை பிளவுபடுத்தும் சக்திகளை நாம் புறக்கணிக்க வேண்டும்..! - பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் பேட்டி

மத உணர்வுகளை தூண்டி சமுதாயத்தை பிளவுபடுத்தும் சக்திகளை நாம் புறக்கணிக்க வேண்டும் என கோவை துடியலூரில் நடைபெற்ற அனைத்து சமூதாய பிரார்த்தனைக் கூட்டத்தில் பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.



கோவை: அவரவர் மதத்தினுடைய கோட்பாடுகளை, கொள்கைகளை கோவில்களிலோ தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ பேசலாம் பொது இடங்களில் அவற்றைப் பேசும் போது தவறான புரிதலை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது என்று வேலூர் இப்ராஹிம் கூறினார்.

கோவை துடியலூர் உள்ள புதிய வாழ்வு நகர தேவாலயத்தில் அனைத்து சமுதாயத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பிரார்த்தனை நிகழ்வு நடந்தது.



இதில் தேவாலயத்தின் போதகர் இமானுவேல் ஜேக்கப், மலுமிச்சம்பட்டி நாகசக்தி தியான பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள், பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அதில் இந்தியா புதிய வல்லரசாக உருவெடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மத உணர்வுகளைத் தூண்டி பாரதத்தை பிரித்தாளும் பணிகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதை மக்கள் புரிந்து கொண்டு புறக்கணிக்க வேண்டும். எல்லா மதத்தினரும் தங்களுடைய புனிதமான வார்த்தைகளை போராட்டங்களுக்கு பயன்படுத்துவதால் அவர்களை எதிர்மறை கருத்து கொண்டவர்களாக பொதுமக்கள் நினைக்கும் சூழல் உருவாகிறது. ஆகவே அவரவர் மதத்தினுடைய கோட்பாடுகளை, கொள்கைகளை கோவில்களிலோ தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ பேசலாம் பொது இடங்களில் அவற்றைப் பேசும் போது தவறான புரிதலை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

இதனை அனைத்து மதத்தினரும் தவிர்க்க வேண்டும். சகோதரத்துவம், அன்பு, விட்டுக்கொடுத்தல், ஒருமைப்பாடு போன்றவற்றை தான் அனைத்து மதங்களும் நமக்கு கற்பிக்கின்றன. மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவரவர் மதங்களின் செயல்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து கோவை மாவட்டத்தில் மழை பெய்யவும், வறட்சி நீங்கவும் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.



இதில் விஸ்வகர்மா சங்க உறுப்பினர்கள் மற்றும் தேவாலயத்தை சார்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...