சீர்மிகு நகரத்திட்டத்தில்‌ ரூ.62.06 கோடி மதிப்பீட்டில்‌ பெரியகுளம்‌ புனரமைக்கப்படும்‌ பணி - மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு

சீர்மிகு நகரத்திட்டத்தில்‌ ரூ.62.06 கோடி மதிப்பீட்டில்‌ பெரியகுளம்‌ புனரமைக்கப்படும்‌ பணிகளில்‌ ஒரு பகுதியாக அனுபவ மையம்‌ அமைக்கப்பட்டுவரும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள குளங்கள்‌ சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ புனரமைத்து அழகுபடுத்தப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.



சீர்மிகு நகரத்திட்டத்தில்‌ ரூ.62.06 கோடி மதிப்பீட்டில்‌ பெரியகுளம்‌ புனரமைக்கப்படும்‌ பணிகளில்‌ ஒரு பகுதியாக அனுபவ மையம்‌ அமைக்கப்பட்டுவரும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னர்‌ அவர் தெரிவித்ததாவது, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள குளங்கள்‌ சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ புனரமைத்து அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்‌ உக்கடம்‌ பெரியகுளக்கரையில்‌ அனுபவ மையம்‌ அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மையத்தில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ செய்யப்பட்டு உள்ள பணிகள்‌ மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ உள்ள சுற்றுலா மையங்கள்‌ அனைத்தும்‌ 3டி வடிவத்தில்‌ திரையிட்டு காட்டப்படும்‌.



இது தவிர குழந்தைகளை கவர 3டி விளையாட்டு அம்சங்களும்‌ உள்ளன. இதற்கான பணிகள்‌ தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த குளக்கரையில்‌ பொதுமக்களை கவர்ந்து இழுக்க பல்வேறு வசதிகள்‌ செய்யப்பட்டு உள்ளது. இந்த அனுபவ மையம்‌ பொது மக்களுக்கு மேலும்‌ ஒரு சிறப்பு அம்சமாக இருக்கும்‌. இதற்கான பணிகள்‌ அனைத்தும்‌ 90 சதவீதம்‌ முடிவடைந்து விட்டது. இப்பணிகள்‌ விரைவில்‌ முடிக்கப்பட்டு பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்‌.

இந்த ஆய்வின்போது சீர்மிகு நகர திட்ட பொது மேலாளர்‌ பாஸ்கரன்‌, உதவி பொறியாளர்‌ சரவணக்குமார்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...