சீர்மிகு நகரத்திட்டத்தில்‌ ரூ.62.06 கோடி மதிப்பீட்டில்‌ பெரியகுளம்‌ புனரமைக்கப்படும்‌ பணி - மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு

சீர்மிகு நகரத்திட்டத்தில்‌ ரூ.62.06 கோடி மதிப்பீட்டில்‌ பெரியகுளம்‌ புனரமைக்கப்படும்‌ பணிகளில்‌ ஒரு பகுதியாக அனுபவ மையம்‌ அமைக்கப்பட்டுவரும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள குளங்கள்‌ சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ புனரமைத்து அழகுபடுத்தப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.



சீர்மிகு நகரத்திட்டத்தில்‌ ரூ.62.06 கோடி மதிப்பீட்டில்‌ பெரியகுளம்‌ புனரமைக்கப்படும்‌ பணிகளில்‌ ஒரு பகுதியாக அனுபவ மையம்‌ அமைக்கப்பட்டுவரும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னர்‌ அவர் தெரிவித்ததாவது, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள குளங்கள்‌ சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ புனரமைத்து அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்‌ உக்கடம்‌ பெரியகுளக்கரையில்‌ அனுபவ மையம்‌ அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மையத்தில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ சீர்மிகு நகர திட்டத்தின்‌ கீழ்‌ செய்யப்பட்டு உள்ள பணிகள்‌ மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ உள்ள சுற்றுலா மையங்கள்‌ அனைத்தும்‌ 3டி வடிவத்தில்‌ திரையிட்டு காட்டப்படும்‌.



இது தவிர குழந்தைகளை கவர 3டி விளையாட்டு அம்சங்களும்‌ உள்ளன. இதற்கான பணிகள்‌ தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த குளக்கரையில்‌ பொதுமக்களை கவர்ந்து இழுக்க பல்வேறு வசதிகள்‌ செய்யப்பட்டு உள்ளது. இந்த அனுபவ மையம்‌ பொது மக்களுக்கு மேலும்‌ ஒரு சிறப்பு அம்சமாக இருக்கும்‌. இதற்கான பணிகள்‌ அனைத்தும்‌ 90 சதவீதம்‌ முடிவடைந்து விட்டது. இப்பணிகள்‌ விரைவில்‌ முடிக்கப்பட்டு பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்‌.

இந்த ஆய்வின்போது சீர்மிகு நகர திட்ட பொது மேலாளர்‌ பாஸ்கரன்‌, உதவி பொறியாளர்‌ சரவணக்குமார்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...