திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் - அத்தப்பூ கோலமிட்டு மாணவிகள் நடனம்

கேரள மக்களின் வசந்தகாலமான ஓணம் திருவிழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அத்தப்பூ கோலமிட்டு, பாடலுக்கு ஏற்றவாறு மாணவியர் நடனமாடி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: மாணவிகள் கேரள சேலை அணிந்து ஓணம் திருநாளை வரவேற்றனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு ஒருவொருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்டனர்.

கேரள மக்களி்ன் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. பெரும்பாலான கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்திலும் வசிப்பதால் இங்கும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசிக்கும் திருப்பூரிலும் ஒணம் பண்டிகை கொண்டாட்டமானது களைகட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஒணம் பண்டிகை கொண்டாட்டமானது சிறப்பாக நடைபெற்றது.

மாணவிகள் கேரள சேலை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.



மேலும் நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஓணம் பண்டிகைக்காக திருப்பூரில் நாளை உள்ளூர் விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...