திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் - அத்தப்பூ கோலமிட்டு மாணவிகள் நடனம்

கேரள மக்களின் வசந்தகாலமான ஓணம் திருவிழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அத்தப்பூ கோலமிட்டு, பாடலுக்கு ஏற்றவாறு மாணவியர் நடனமாடி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: மாணவிகள் கேரள சேலை அணிந்து ஓணம் திருநாளை வரவேற்றனர். பின்னர் கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு ஒருவொருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்டனர்.

கேரள மக்களி்ன் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. பெரும்பாலான கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்திலும் வசிப்பதால் இங்கும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசிக்கும் திருப்பூரிலும் ஒணம் பண்டிகை கொண்டாட்டமானது களைகட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் - பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஒணம் பண்டிகை கொண்டாட்டமானது சிறப்பாக நடைபெற்றது.

மாணவிகள் கேரள சேலை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.



மேலும் நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஓணம் பண்டிகைக்காக திருப்பூரில் நாளை உள்ளூர் விடுமுறை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...